தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
14.12.2016ம் தேதி “Shipping Logistics & Documentation” என்ற தலைப்பின் கீழ் mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினர்களாக திரு CM.Samir, Vice President – Commercial, Chakiat group – Chennai, திரு. Jayanth Thomas, GM – Commercial, Chakiat Group – Tuticorin மற்றும் திரு.Palaniappan, Chakiat Group – Chennai ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K .திருப்பதி ராஜன் அவர்கள் வாழ்த்துரை தெரிவித்து தொடங்கி வைத்தார் முதலில் பேசிய திரு.சமீர் அவர்கள் கப்பல் துறையில் எவ்வாறு ஆவணங்களை தயார் செய்ய வேண்டும் என்பது குறித்தும் பதிவு செய்த ஆவணத்தை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து கூறினார் ஏற்றுமதி தொழிலின் முக்கிய இடமான ஆவணங்களை பதிவு செய்யும் முறை மற்றும் பதிவு செய்த ஆவணத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக கூறினார். திரு.ஜெயந்த் தாமஸ் அவர்கள் பேசும் போது சுங்கத்துறையில் நமது ஆவணங்களை எவ்வாறு முறைப் படுத்த வேண்டும் சுங்கத்துறையில் இருந்து நமது பொருட்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது போன்ற சந்தேகங்களுக்கு விரிவாக பதில் கூறினார். சுங்கத்துறையில் நாம் நமது ஏற்றுமதி பொருட்களுக்கு முறையான பில் மற்றும் காப்பீடு வைத்திருந்தால் எந்த ஒரு பிரெச்சனையும் வராது என்பதை தெளிவாக கூறினார் மேலும் கருத்தரங்கில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் கேள்வி பதிலுக்கு பதில் அளித்தார் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரும் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக கூறினர் .