தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு 30.06.2017ம் தேதி
“GST – Transition and implementation strategies” என்ற தலைப்பின் கீழ் மதுரை Poppys ஹோட்டல்இல் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக FIEO உதவி இயக்குனர் செல்வி.செல்வநாயகி, இயக்குநர் திரு.உன்னிகிருஷ்ணன் மற்றும் வணிகவரித்துறை முன்னாள் உதவி இயக்குனர் திரு.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட FIEO உதவி இயக்குனர் செல்வி.செல்வநாயகி, ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதிராஜன் அவர்கள் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்து வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
FIEO இயக்குநர் திரு.உன்னிகிருஷ்ணன் அவர்கள் ஏற்றுமதி துறையில் GSTன் முக்கிய பங்கை கூறினார்.
வணிகவரித்துறை முன்னாள் உதவி இயக்குனர் திரு.சௌந்தரராஜன் அவர்கள் பேசும் போது ஏற்றுமதி துறையில் GSTன் சாதகம், மற்றும் பாதகம் குறித்து கூறினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் துணைத்தலைவர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.
.