தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு 21.05.2016 அன்று Mepco சிற்றரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் Explore Market and Hunt buyers என்ற தலைப்பில் கமலம் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனர். திரு JK. முத்து அவர்கள் கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
ஒரு நிறுவனம் தனது நிறுவன எல்லையை விரிவுபடுத்த மற்றும் மேம்படுத்த கட்டாயம் சந்தையை ஆராய தெரிந்திருக்க வேண்டும், ஒவ்வொரு ஏற்றுமதியாளரும் சந்தையை பற்றிய அப்போதைய நிலைமையை தெரிந்து வைத்து கொள்வது அவசியம், மேலும் எவ்வாறு வாங்குவோரை சரியான முறையில் தேர்ந்தெடுப்பது என்பது அதை விட முக்கியமான ஒன்று, சரியான வாங்குவோர் இருந்தால் மட்டுமே நம்மால் விற்க முடியும். சரியான வாங்குவோரை தேர்ந்தெடுப்பது எப்படி , முதலில் அவருக்கு அந்த பொருள் தேவை படுகிறதா என்பதை ஆராய வேண்டும், வாங்கும் தேவை உள்ளவர் மட்டுமே வாங்குவோர் எனவே வாங்குவோரின் தேவை அறிந்து சரியான வாங்குவோரை துப்பாக்கியில் இருந்து வெளி வரும் தோட்டாவின் வேகத்தை போல் வாங்குவோரை சரியாக அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து வணிகம் செய்ய வேண்டும்.
அடுத்ததாக தலைவர் திருப்பதி ராஜன் பேசும் போது, ஏற்றுமதியாளர்கள் சரியான வாங்குவோரை தேர்வு செய்து வணிகம் செய்தல் மட்டுமே வெற்றி அடைய முடியும் மேலும் எவ்வாறு வாங்குவோரை அடையாளம் காண வேண்டும் என்பதை புரிந்து அதன் படி செயல் பட வேண்டும் என்று கூறினார்.