தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் செயல்படும் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் கருத்தரங்கு 26-03-2016 அன்று நடைபெற்றது. வணிகர்களுக்கிடையே ஏற்படக்கூடிய பிணக்குகளை தீர்த்து வைக்கும் பொருட்டு வெளியாகக்கூடிய தீர்ப்பின் அவகாசம் கூடிக்கொண்டே போகும் பட்சத்தில் அவகாசத்தை குறைக்கவே ARBITRATION உதவுகிறது.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் திரு.கே.திருப்பதி ராஜன் அவர்கள் விளக்கும் போது, இரண்டு வணிகர்களுக்கு இடையே தோன்றும் தகறாரை பொதுவான ஒரு நபரை வைத்து தீர்த்துக்கொள்வது தான் ARBITRATION என்றார். இதற்காக வணிகர்கள் நீதிமன்றத்தை நாடத் தேவையில்லை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்திலேயே இதற்கான அமைப்பு CHAAT என்கிற பெயரில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு.என்.ஜெகதீசன் பேசுகையில், நீதிமன்றத்திற்கும் சேட் அமைப்பிற்கும் உள்ள வித்தியாசத்தையும் பயன்களையும் விளக்கினார். அதாவது, பிரச்சினையை தீர்க்க விரும்பும் இரண்டு வணிகர்களில் ஒருவர் நீதிமன்றத்தை நாடுகிறார். ஆனால், ஒப்பந்தத்தில் ARBITRATION உள்ளதென்றால் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்காது. அதேபோல், ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிமன்றம் தன்னுடைய நேரத்திற்கே அவரை அழைத்து விசாரிக்கும். ARBITRATION முறையில் சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களுமே பொதுவான நேரத்தை நிர்ணயித்து அதில் தங்களுடைய வழக்கை வைத்துக்கொள்ளலாம் என்று பேசினார்.
முதுநிலைத்தலைவர் திரு.இரத்தினவேல் அவர்கள் பேசும் போது, இளம் தொழில் முனைவோர் மைய துவக்க விழாவின் போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், வணிக பிணக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு வந்து உங்களுடைய நேரத்தை வீணாக்காதீர்கள் என்றார். அவர் சொன்ன, இந்த வாசகம் தான் CHAAT என்ற அமைப்பு உருவாவதற்கான காரணம். 2007ம் ஆண்டு நவம்பர் 27 அன்று மெட்ராஸ் ஹைகோர்ட் நீதிபதி ஏபிஷா துவக்க விழாவிற்கு வந்து சிறப்பித்தார். அத்துடன் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனும் வந்து பாராட்டியதாக முதுநிலைத்தலைவர் குறிப்பிட்டார்.