தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பவர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் 27.05.2015 அன்று சங்கத்தின் ஹட்சன் அரங்கில் WORKSHOP ON GST AND FOREX RISK MANAGEMENT THROUGH E-PLAT FORM எனும் தலைப்பின் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் வரவேற்புரை நிகழ்த்திய தலைவர் K.திருப்பதி ராஜன் அவர்கள், இந்தியாவை பொறுத்தவரைக்கும் VAT (Value-added tax) எனும் மதிப்பு கூட்டு வரி என்பது மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும். இந்நிலையில் மத்திய அரசு ஏப்ரல் -1, 2016 ல் கொண்டுவர இருக்கும் GST (Goods And Service Tax) இந்தியாவின் அனைத்து மாநிலத்திற்கும் ஒரே Tax Rateஐ நிர்ணயிக்கும் என்று இந்த கருத்தரங்கின் சாராம்சத்தை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.
பின்னர் சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு.உன்னி கிருஷ்ணன்(Joint Deputy Director General FIEO – Southern Region) அவர்கள், இந்த GST எந்தவிதமான தாக்கத்தை நமது வியாபாரத்தில் ஏற்படுத்தப்போகிறது என்பது பற்றி கூறியதுடன் உறுப்பினர்களுக்கு விரிவான
விளக்கங்களை கொடுத்தார்.
அடுத்ததாக பேசிய R.சுப்ரமணிய சிவம் (Chartered Accountant, Corportate Trainer) வியாபாரம் செய்பவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் வரிகள் எளிமையாகவும் சுலபமாகவும் கிடைக்க வழி வகை செய்வதே இந்த GST ஆகும் என்றார். மேலும் கடந்த 20 ஆண்டுகளாக அதாவது, 1991 -ம் ஆண்டிலிருந்து மத்திய அரசு இந்த GST ஐ கொண்டு வர முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இறுதியாக துணைத்தலைவர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை தெரிவித்து கருத்தரங்கை நிறைவு செய்தார்.