தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மேம்பாட்டு மையம் சார்பில் 11.05.2015 அன்று சங்கத்தின் ஹட்சன் அரங்கில் INCO-TERMS ESSENTIAL FOR EXIM TRADE எனும் தலைப்பில் கீழ் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக மையத்தலைவர் K.திருப்பதி ராஜன் அவர்களின் குரு, திரு.V.ராமசுப்ரமணியன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆரம்பமாக பேசிய திரு.K.திருப்பதி ராஜன் அவர்கள், நான் ஏற்றுமதியாளராக வேண்டுமென்று நினைத்து திரு.ராமசுப்ரமணியன் அவர்களை சந்தித்த போது ஒரு LETTER PAD, VISITING CARD இருந்தால் மட்டுமே போதுமானது என்று கூறினார்.
அதாவது, ஏற்றுமதியைப் பற்றி யாருமே சொல்லிக் கொடுக்க முன்வராத நேரத்தில் தன்னை ஒரு ஏற்றுமதியாளராக்கிய பெருமை திரு.ராமசுப்ரமணியன் அவர்களையே சேரும் என ராஜன் அவர்கள் குறிப்பிட்டார். பின்பு சிறப்புரையாற்றிய திரு.V.ராமசுப்ரமணியன் அவர்கள் சுமார் 200, 300 வருடங்களுக்கு முன்னாள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். அப்போது இந்தியாவிலிருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வெளிநாட்டிற்கு கொண்டுபோய் விற்றுவிட்டு நாடு திரும்புவார்கள்.
ஏற்றுமதியை பொறுத்தவரை முடியும், முடியாது என்று எதுவுமே கிடையாது. மண்ணைக்கூட மாலத்தீவுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள்.
அதேபோல் பொதுவாக ஏற்றுமதியை பற்றி விஷயம் தெரிந்தவன் 20 மணிநேரம் தொடர்ந்து சொல்லிக்கொடுத்தால் யாரும் ஏற்றுமதியாளராகலாம் என்ற நம்பிக்கையை ஊட்டினார்.
மேலும் Inco- Terms என்பது( International Commercial Terms) சட்டம் அல்ல; மூன்று மூன்று எழுத்துக்கள் சேர்ந்த ஒரு குறியீட்டு சொல் ஆகும். அதாவது, வெவ்வேறு மொழிகளை பேசக்கூடிய இரு ஏற்றுமதியாளர்கள் இந்த குறியீட்டு சொல்லை வைத்தே தன் ஏற்றுமதி பொருட்களை புரிந்து கொண்டு பணியாற்றுவார்கள். இது பற்றி உறுப்பினர்களுக்கு மிக தெளிவாகவும் விளக்கமாகவும் ராமசுப்ரமணியம் அவர்கள் எடுத்துரைத்தார்.
இறுதியாக ஒருங்கிணைப்பாளர் திரு.ராமகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை தெரிவித்து கருத்தரங்கை நிறைவு செய்தார்.