ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் 5வது ஆண்டுவிழா 27-10-2013 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது.
இந்த விழாவில் மையத்தின் தலைவர் திரு. K. திருப்பதி ராஜன் அவர்கள் தனது வரவேற்புரையில், ஒவ்வொரு ஆண்டுவிழாவிலும் ஏற்றுமதி செய்யும் உறுப்பினர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறோம். இது அவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மென்மேலும் அவர்கள் தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மையத்தின் மூலம் வழங்கி வருகிறோம். ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி செய்வதற்கு தேவையான விபரங்களை ஒவ்வொரு தலைப்பில் கற்பிக்கிறோம்.