தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கத்தின் உதவியுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பேர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் ஏற்றுமதி மையத்தின் கருத்தரங்கு
13.09.2017ம் தேதி “Payment Terms & Risk Management” என்ற தலைப்பின் கீழ் Mepco சிற்றவை அரங்கத்தில் ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K. திருப்பதி ராஜன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தில் சிறப்பு விருந்தினராக திரு.S.சாய் சுப்ரமணியம் GC – EPC கலந்து கொண்டார்.
ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் திரு.K.திருப்பதிராஜன் அவர்கள் சிறப்புவிருந்தினரை அறிமுகம் செய்து வைத்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட திரு.S.சாய் சுப்ரமணியம் அவர்கள் ஏற்றுமதி வர்த்தகத்தில் நம்முடைய பண பரிவர்த்தனை எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் Advance payment, LC போன்றவற்றிற்கு விரிவான விளக்கம் அளித்து கூறினார் மேலும் நமக்கும் வங்கிக்கும் உள்ள தொடர்புகள் குறித்து மிக அழகாக கூறினார் வாங்குவோரிடம் பண பரிவர்த்தனையை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை விளக்கமாக கூறினார்,
ஏற்றுமதியில் என்னென்ன இடர்பாடுகள் வரும் என்பதையும் அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்து கூறினார்.
நிறைவாக ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் செயற்குழு உறுப்பினர் திரு.S. ராமகிருஷ்ணன் அவர்கள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி கூறினார்.